×

டெல்டா மாவட்டங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்; முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிர்களைக் காத்திடும் வகையில் 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு, 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு, ஈரோடு, கள்ளக்குறிச்சி,தருமபுரி மாவட்டங்களில் 5 மஞ்சள் மெருகூட்டும், வேகவைக்கும் இயந்திரங்கள் வாங்க ரூ.2.12 கோடி ஒதுக்கீடு” ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

The post டெல்டா மாவட்டங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Delta ,Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,C ,
× RELATED காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்...